நிலையவள்

17 வயதான பாடசாலை மாணவியொருவர் தற்கொலை

Posted by - June 27, 2017
17 வயதான பாடசாலை மாணவியொருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெலிமடை – அம்பகஸ்தொவ – கரகஹாஉல்பத பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தையின் எச்சரிக்கையால் கோபமடைந்து இவ்வாறு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த மாணவி…
மேலும்

யாழில் நபரொருவர் மீது கொடூரத் தாக்குதல்

Posted by - June 27, 2017
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் நேற்று இரவு கூரிய ஆயுதத்துடன் உந்துருளிகளில் வந்த சிலர், நபரொருவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். மானிப்பாய் – ஆனந்தன் வைரவர் ஆலய சந்தியில் நேற்று இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.…
மேலும்

கிளிநொச்சியில் காற்றினால் தூக்கி வீசப்பட்டது முன்பள்ளிக் கூரை

Posted by - June 27, 2017
இன்று  முற்பகல் 11.30  மணியளவில் வீசிய பலத்த  காற்றினால்  உதயநகரில்  அமைந்துள்ள சிறுவர்  முன்பள்ளியின் கூரை  வீசப்பட்டுள்ளது  வீசப்படும் போது மூன்று ஆசிரியர்களும்  முப்பதிற்கும் மேற்ப்பட்ட  ஆசிரியர்களும் குறித்த  கட்டடத்துக்குள்  இருந்துள்ளனர்  இருப்பினும்  எவருக்கும் எவ்வித சேதங்களும் ஏற்ப்படவில்லை குறித்த முன்பள்ளிக்கு…
மேலும்

கேப்பாபுலவு மக்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ! ஜனாதிபதி செயலகம் செல்ல பொலிசார் தடை

Posted by - June 27, 2017
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்தநிலம் கோரி கடந்த மார்ச் மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று 119  ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்றையதினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர் சம உரிமை இயக்கம் முன்னிலை சோஷலிச…
மேலும்

தமிழர் தொன்மங்கள் மீதும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்ந்தமை இனவழிப்பின் தொடர்ச்சி – சிறீதரன்

Posted by - June 27, 2017
கடந்த வாரம் கிளிநொச்சி நகரில் கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பெற்ற திருவள்ளுவர் சிலை பொருத்தப்பட்டிருந்த பூகோள உருவில் பொறிக்கப்பட்டிருந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரது எச்சரிக்கையின் காரணமாக நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கின்றபோது மேற்கண்டவாறு…
மேலும்

தமிழ் பண்பாட்டை நாம் இழந்துவிடக்கூடாது – சிறீதரன்

Posted by - June 27, 2017
எமது தமிழ் பண்பாட்டை தமிழர்களாகிய நாம் இழந்துவிடக்கூடாது, எமது பண்பாட்டை, மொழியை, கலாசாரத்தை நாம் இழப்போமாகவிருந்தால் தமிழர்களாக இந்த மண்ணில் நாம் வாழமுடியாது என யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கம்பன் கழகம் நடாத்தும்…
மேலும்

முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களுக்கான அரிய வாய்ப்பு

Posted by - June 27, 2017
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள மக்களுக்காக நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ய.அநிருத்தனன் அறிவித்துள்ளார். இந்த நடமாடும் சேவையானது எதிர்வரும் ஜுலை மாதம்…
மேலும்

நல்லிணக்கத்தை சீர்குலைக்க செயற்படும் தரப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – விஜயதாச

Posted by - June 26, 2017
தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்க செயற்படும் தரப்பினர்களுக்கு எதிராக பாரபட்சம் பாராமல் சட்டம் நிலைநாட்டப்படும் என  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் விகாரையொன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர ்இதனை தெரிவித்திருந்தார். மேலும் , அரசாங்கம் ஒருபோதும்…
மேலும்

கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தன்னை சந்தேகிக்கின்றனர் – விக்னேஸ்வரன்

Posted by - June 26, 2017
தாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக, கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சந்தேகிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றின் செவ்வியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்புடன் தாம் இணைந்திருப்பதால்,…
மேலும்

வடமாகாணத்தின் இரண்டு அமைச்சர்கள் விசாரணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என தெரிவிப்பு

Posted by - June 26, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புதிய விசாரணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என்று, வடமாகாணத்தின் இரண்டு அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஓய்வுப்பெற்ற நீதிபதி தியாகேந்திரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை மாகாண அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் பி.சத்தியலிங்கம் ஆகியோர் தொடர்பில்…
மேலும்