தென்னவள்

அமெரிக்காவுக்கு போறீங்களா?

Posted by - June 29, 2016
அமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்பத்தில் பேஸ்புக், டுவிட்டர் விபரங்களையும் கேட்டுப் பெற அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும்

சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என கூறமுடியாது

Posted by - June 29, 2016
ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என கூறமுடியாது என்று கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

தீர்வொன்றை பெற்றுத்தரவில்லை என்றால் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவேன்

Posted by - June 29, 2016
மீகஹாதென்ன ஆரம்ப பாடசாலையின் முதலாம் தரத்திற்காக 10 குழந்தைகளை இணைத்துக்கொள்ளாமை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தரவில்லை என்றால் தான் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த விலகுவதாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊழல் தடுப்பு குழு செயலகத்தை தொடர்ந்து பராமரிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - June 29, 2016
தீவிர மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக நிறுவப்பட்டுள்ள ஊழல் தடுப்பு குழு செயலகத்தை தொடர்ந்து பராமரிக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இதனுடன் தொடர்புடைய ஆவணம் நேற்று கூடிய அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும்

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரண்டாம் நாளாகவும் கூடினர்

Posted by - June 29, 2016
பிரித்தானிய பிரதிநிதித்துவம் அற்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரண்டாம் நாளாகவும் பிரசல்ஸில் கூடி தற்போதைய நிலைமையை ஆராய்கின்றார்கள்.நேற்று இடம்பெற்ற அமர்வின்போது அதில் பங்கேற்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் இணைந்திருக்கும் 27 நாடுகளுடன் தொடர்ந்தும் உறவுகள்…
மேலும்

பவித்ரா வன்னியாராச்சி , நீதவான் அருணி ஆர்டிகலவினால் எச்சரிக்கப்பட்டார்

Posted by - June 29, 2016
பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி , கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் அருணி ஆர்டிகலவினால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த போது, தனது வழக்கறிஞருக்கு ஆலோசனை வழங்க முற்பட்டமையாலேயே அவர் எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணம் மீசாலையில் லொறியுடன் மோதுண்டு இளைஞர் பலி!

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் வீதியில் வேம்பிராய் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்

மாணவனை அச்சுறுத்திய இரு ஆசிரியர்களுக்கு விளக்கமறியல்

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் இருவர் எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் உயர்தரத்தில் பயிலும் மாணவனை குறித்த பாடசாலையின் உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதில் செவிப்பறை பாதிக்கப்பட்ட நிலையில்…
மேலும்

பூநகரியில் கடும் குடிநீர் நெருக்கடி-15 பாடசாலைகளில் மாணவர்கள் அவதி

Posted by - June 29, 2016
கிளிநொச்சி – பூநகரிக் கல்விக் கோட்டத்தில் 15 பாடசாலைகள் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக பூநகரிக் கோட்டக் கல்வி அதிகாரி சு.தர்மரட்ணம் தெரிவித்துள்ளார். பூநகரியில் நிலவும் குடிநீர்ப்பற்றாக்குறையால் மாணவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமை தொடர்பாக தெரிவித்தார்.
மேலும்

இடமாற்றத்தைக் கண்டித்து மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - June 29, 2016
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முறையற்ற இடமாற்றத்தைக் கண்டித்தும் தங்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்