தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியை நாடுகடத்த இலங்கையில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவினர் அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகின்றனர்.
பம்பலப்பிட்டி பகுதியில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் 26 கோடி ரூபா பெறுமதியான காணியை போலி காணி உறுதிப் பத்திரம் ஊடாக 5 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற திட்டமிட்ட கும்பல் ஒ ஒன்றினை கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
புகையிரத என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் இன்று நள்ளிரவு 12 மணி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. 5 பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.