தென்னவள்

யுவதியின் மோசமான செயல்

Posted by - October 25, 2025
போலியான பேஸ்புக் கணக்கை உருவாக்கி, நிர்வாண படங்களுடன் வேறு பெண்ணின் முகத்தை இணைத்து புகைப்படங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

முன்னாள் தவிசாளர் சமந்த நாமல் விஜேவர்தனவுக்கு 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - October 25, 2025
சொத்து குவிப்பு விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டு கலேன்பிந்துனுவெவ பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் சமந்த நாமல் விஜேவர்தனவை எதிர்வரும்  31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும்

அமைச்சரவை மறுசீரமைப்பினால் குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் ஏற்படாது

Posted by - October 25, 2025
அமைச்சரவையை மறுசீரமைப்பதால் குறைநிரப்பு பிரேரணையின் மொத்த தொகையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. கடந்த கால எடுத்துக்காட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றலாம். அமைச்சரவை மறுசீரமைப்பினால் குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றுவதில் எவ்வித சட்ட சிக்கலும் ஏற்படாது என ஆளும் கட்சியின் பிரதம…
மேலும்

ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த மன்னார் நானாட்டான் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது

Posted by - October 25, 2025
மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை(24) காலை கைது செய்யப்பட்டனர்.
மேலும்

பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை பாதாளக் குழு எனக் கூறி நியாயப்படுத்த முடியாது!

Posted by - October 25, 2025
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக்கூறி பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

என்னை படுகொலை செய்ய ஒரு தரப்பினர் முயற்சி தாமதிக்காதீர்கள், பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!-ஜகத் விதான

Posted by - October 25, 2025
என்னை சுட்டு படுகொலை செய்வதற்கு ஒரு தரப்பினர் முயற்சிப்பதாக கிடைத்துள்ள புலனாய்வு தகவலை பொலிஸ்மா அதிபர் களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.தாமதிக்காதீர்கள் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட…
மேலும்

அரச வைத்தியசாலைகளின் அடிப்படை வசதிகள் பூர்த்திசெய்யப்படாமையால் சிகிச்சை சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடி

Posted by - October 25, 2025
நாட்டில் உள்ள பல அரச வைத்தியசாலைகளின் கட்டமைப்பில் ஒரு சில அடிப்படை வசதிகள் இன்றளவும் முறையாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. இதனால் வைத்தியசாலைகளுக்கு வருகைத்தரும் நோயாளர்களுக்கு சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதில் கடும் நெருக்கடி உருவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…
மேலும்

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு

Posted by - October 24, 2025
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கமைய பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி துறைசார்ந்தவர்களுடன் எந்தவொரு கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்காமல் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக அதிபர்…
மேலும்

இந்தியா செல்கிறார் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க

Posted by - October 24, 2025
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, இந்திய கடல்சார் வாரம் 2025 நிகழ்வில் பங்கேற்பதற்காக, எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மும்பை செல்லவுள்ளார்.
மேலும்

எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறிக்கும் நாசகார செயற்பாடுகள்

Posted by - October 24, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த  செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் வடக்கு,…
மேலும்