படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை மீட்டு புதுக்கோட்டை மீனவர்கள் கரை சேர்த்தனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை வீடியோ படம் எடுத்து, ஏற்கனவே உள்ள வீடியோ பதிவுடன் ஒப்பிட்டு பார்க்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தனது பிரசாரத்தின் போது அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதில் சமீபத்திய சர்ச்சை, துப்பாக்கி ஆர்வலர்களுக்கு அவர் விடுத்த அழைப்பு பற்றியது ஆகும்.
தென் ஆப்பிரிக்காவில் நீதிமன்ற உத்தரவை மீறி சுமார் 15 ஆயிரம் மின் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.தென் ஆப்ரிக்காவின் அரசு மின் நிறுவனமான எஸ்காம் கட்டுப்பாட்டில் ஏராளமான மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை…
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு மராட்டிய மாநில தமிழர்கள் ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும் கணிசமான நிதி திரட்டவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.