புண்மனது காயாது புலம்புகிறாள் தாயொருத்தி- வன்னியூர் குருஸ் –
பன்னிரண்டாய் ஆண்டுகள் எண்கடந்து போயிற்று புண்மனது காயாது புலம்புகிறாள் தாயொருத்தி, எத்தனை பிள்ளையை பெற்றெடுத்த வயிறிதோ ஒத்தையில் கிடந்திங்கே ஒப்பாரி வைக்கிறதே… முத்தென்றும் மணியென்றும் பெற்றணைத்த பிள்ளைகளை கொத்தாய் இழந்தாளோ கொடியோரின் கொலைக்களத்தில், வித்துடல் எடுத்தாளோ விட்டிடறிப் போனாளோ வேரறுத்த தரையதிலே…
மேலும்