நிலையவள்

மீனவத் தொழிலுக்கான தடைகளை ஒட்டுமொத்தமாக மேற் கொள்வது ஆரோக்கியமானதல்ல- றிசாட்

Posted by - February 25, 2017
மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவது தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி  அமைச்சருக்கும், உயர் மட்டத்தினருக்கம் தான் வெகுவாக உணர்த்தியுள்ளதாக அகில…
மேலும்

சிகிரியாவுக்கு பிரவேசிப்பதற்கு புதியு கதவு

Posted by - February 25, 2017
சிகிரியாவுக்கு பிரவேசிக்கும் போது மேற்கு பகுதியில் உள்ள பிரதான கதவினை தவிர்த்து, கிழக்கு பகுதியிலும் கதவு ஒன்று இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிகள் மூலம் இது தெரிய வந்துள்ளதாக மத்திய கலாசார நிதியம் இதனை தெரிவித்துள்ளது.
மேலும்

4 லட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை! ஆய்வறிக்கை

Posted by - February 25, 2017
இலங்கையில் 5 வயது முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட 4 லட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது, சிறுவர்களின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 9.9 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் 2016 ஆம்…
மேலும்

கேப்பாபுலவில் திரண்ட இளைஞர்கள் மக்களுடன் வீதியில் இறங்கி போராட்டம்

Posted by - February 25, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 26ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டமானது இன்றுடன் 26ஆவது நாளை…
மேலும்

பகிடிவதையில் ஈடுபட்ட மேலும் பலரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை

Posted by - February 25, 2017
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாய பீட முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடிவதை கொடுத்த மேலும் சில சிரேஷ்ட மாணவர்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் ஈடுட்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பகிடிவதை செய்த மேலும் பலரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  கண்டி…
மேலும்

இனவாத கட்சிகள் பிரிந்து செல்வது நல்லது- மஹிந்த அமரவீர

Posted by - February 25, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து  விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி பிரிந்து செல்வது நல்லதெனவும்,  எதிர்காலத்தில் இனவாத அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் எனவும் ஐ.ம.சு.மு.யின் செயலாளரும் அமைச்சருமான  மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் சில…
மேலும்

ஜெனீவாவில் நேற்றும் இலங்கைக்கு எதிராக முறைப்பாடுகள்

Posted by - February 25, 2017
ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற “பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை ஒழிப்பதற்கான ஐ.நா. குழு”வின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து சென்ற அரச சார்பற்ற அமைப்பின் (NGO) பிரதிநிதிகள் இருவர், இலங்கை இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பலவற்றை இக்குழு…
மேலும்

கல்வி அமைச்சில் கேர்ணல் நியமனம், 01 ஆம் திகதி சுகயீனப் போராட்டம்

Posted by - February 25, 2017
கல்வி அமைச்சின் விளையாட்டுப் பிரிவுக்கான புதிய பணிப்பாளராக இராணுவ கேர்ணல் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 01 ஆம் திகதி புதன் கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்க கல்வி நிருவாக சேவை ஊழியர்களின் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நியமனத்துக்கு எதிராக…
மேலும்

இவ்வருடத்துக்குள் துறைமுகத்துக்காக பட்டகடனில் 80 வீதத்தை செலுத்துவோம்- ரணில்

Posted by - February 25, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக பட்ட கடன் தொகையில் 80 வீதமானவற்றை இவ்வருடத்தில் செலுத்தி முடிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை இதற்கு உதவியது எனவும் அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைச் பிரதமர்…
மேலும்

இலங்கை பொலிஸாருக்கு எதிராக ஹொங்கொங் அமைச்சர்கள் முறைப்பாடு

Posted by - February 25, 2017
இலங்கை இரகசியப் பொலிஸாருக்கு எதிராக ஹொங்கொங் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அந்நாட்டுப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹொங்கொங்கில் உள்ள இலங்கை இராணுவ அதிகாரியொருவரை அந்நாட்டின் அனுமதியின்றி இலங்கை இரகசியப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதற்காகவே இந்த அமைச்சர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.…
மேலும்