இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை 1.10 மணியளவில் சிங்கபூரிற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
மூன்று நாள் பயணமாக நேற்றுமுன்னிரவு கொழும்பு வந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்றிரவு பேச்சுக்களை நடத்தினார்.
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்நலம் தொடர்பில் நிலவுகின்ற கவலைகளைக் கருத்திற்கொண்டு, வடமாகாணசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அவர்களது நலன்கள் தொடர்பாக எமது அமைச்சு கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது, அதனை தடுத்து நிறுத்த தவறியமைக்காக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மன்னிப்புக் கோரவேண்டுமென சமாதானம் மற்றும் நீதிக்கான பிரசார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு அரச இணையத்தங்கள் உட்பட 37 இணையத்தளங்களை ஊடுருவியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – பம்பலப்பிட்டியில் வசித்துவந்த செல்வந்தரான மொஹமட் சுலைமானின் படுகொலை தொடர்பில் சேதாவக்க மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசஙங்களில் வசிக்கும் இருவர் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், பண்ணை சிறைச்சாலை தொகுதி முதற்கட்ட நிர்மாணப்பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவையின் இணைபேச்சாளர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு தெரிவித்தார்.
தமிழர் தாயகப் பிரதேசமான கிளிநொச்சியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் போராளி ஒருவர், வெள்ளைவான் கடத்தல் பாணியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கிளிநொச்சி தொண்டைமான் பகுதியைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் என்ற 26 வயதுடைய முன்னாள் போராளியே வெள்ளைவானில் வந்தவர்களால் அடித்து,…
வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தை விடுவித்ததை போன்று பூந்தோட்டம் கூட்டுறவு பாடசாலையையும் விடுவிக்க வேண்டும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இராணுவத்தினரிடம் இருந்த வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபம் அண்மையில்…