110-வது விதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் வாக்குவாதம் நடந்தது. முதல்-அமைச்சர் தன்னிடம் இருந்த விவரங்களை சட்டசபை செயலாளர் மூலம் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தார்.
ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று கருதப்பட்ட நிலையில் மாறாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதுடன் விமர்சனத்துக்கும் ஆளாகி இருக்கிறது.
காசிமேடு விசைப்படகு மீனவர்கள் தடை காலம் முடிந்த பிறகும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மறுத்து ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டுள்ளனர். காசிமேடு துறைமுகம் மிகப்பெரிய மீன் சந்தையாக உள்ளது. இதன் அருகே மீன் ஏல மார்க்கெட் செயல்பட்டு வந்தது.
அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கைக்குப் பின் வடமாகாணசபைக்கு வந்திருக்கும் சோதனை எனப்படுவது முதலாவதாக தமிழ்த்தேசியத்திற்கு வந்த சோதனைதான். இரண்டாவதாக தமிழ் ஜனநாயகத்திற்கு வந்த சோதனைதான். மூன்றாவதாக அமைச்சர்களுக்கு வந்த ஒரு சோதனை அது. நான்காவதாக விக்கினேஸ்வரனுக்கும் அது சோதனைதான்.
லண்டன் நகரின் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.