ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்கூட மாணவர்கள் இல்லை. கைதான 10 பேரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஈரானில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள் என ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டதாக சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் மொழி சிறுபான்மையினருக்கு எதிரானது மட்டும் அல்ல, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே விரோதமானது எனக் கூறி நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.