சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், நேற்று (29) தெரிவித்தார்.
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் யுகதனவி மின்உற்பத்தி நிலையம் தொடர்பில் உண்மையாக பேசுபவர்களாக இருந்தால், அவர்கள் மூவரும் அமைச்சுப் பதவிகளை துறந்து வெளியில் வரவேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
வவுணதீவு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் நேற்று (29) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப் போவதாக முகநூல்களில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென புத்தசாசன அமைச்சின் முன்னாள் ஆலோசகர் கலகம தம்மரங்ஸி தேரர் தெரிவித்தார்.
தற்போதைய உள்ள நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டாலும் நாட்டை பாதாள குழியில் இருந்து மீட்டெடுப்பது என்பது கடினமான விடயமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.