போதையில் எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடமையில் இருந்து ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரண தண்டனை அனுபவித்து வரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பதற்கான தேவைப்பாடுகள் உள்ளனவா என்பது குறித்து ஆராயப்படும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அவற்றின் வடுக்கள் இன்னமும் தொடர்வதாகவும், அவர்கள் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்துவருவதாகவும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளன.
வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளடங்கலாகக் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு நிலை தொடர்வதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அதிருப்தி வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், பொறுப்புக்கூறலே சட்டவாட்சியின் மையப்புள்ளி எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளல் என்பவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில் இலங்கையை வலியுறுத்திய இந்தியா, சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும்…
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் எனவும், தனிநபர்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும் பிரிட்டன், நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பேரவையின் உறுப்புநாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஒரு குறிப்பிட்ட வைத்தியசாலையில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்படுமாயின் அதுஇ நிதி பற்றாக்குறையால் ஏற்பட்ட தட்டுபாடு அல்ல மாறாக அவற்றை கொள்முதல் செய்வதில் ஏற்பட்டும் செயன்முறை சிக்கல் காரணமாகவே மருந்துகளுக்கும் மருத்துவ உபகரங்களுக்கும் தட்டுபாடு ஏற்படுகிறது என சுகாதார…
போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கொண்ட கொள்கலன்கள் எவ்வாறு துறைமுகத்திலிருந்து வெளியே வந்தன? இந்தக் கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தவர்கள் , அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.