நிலையவள்

நீதிபதிகளுக்கு சம்பளம் உயர்வு

Posted by - December 20, 2017
நீதிபதிமாருக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று அனுமதியளித்துள்ளது. இதன்படி உயர், மேன்முறையீட்டு மற்றும் மேல்நீதிமன்றங்களின் ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளது. நீதி அமைச்சர் தலதா அத்துகோரள முன்வைத்த அமைச்சரவைப்பத்திரத்துக்கே அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
மேலும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவு

Posted by - December 20, 2017
248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நன்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. மேலும் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நாளை நண்பகலுடன் நிறைவடையவுள்ளது. வேட்புமனுத் தாக்கலின் பின்னர் ஆட்சேபனை தெரிவிப்புக்காக ஒன்றறை மணித்தியாலங்கள்…
மேலும்

பாடசாலைகளுக்கு புத்தகம் விநியோகிப்பதில் தாமதம் – ஆசிரியர் சங்கம்

Posted by - December 20, 2017
அடுத்த வருடத்திற்கான பாடசாலைகளுக்கு புதிய புத்தகங்களை விநியோகிப்பதில் சிக்கல் உருவாகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். அடுத்த ஆண்டு, 50 சதவீதமான புதிய புத்தகங்களே வழங்கப்படும் என்றும், 50 சதவீதம் இந்த வருடம் வழங்கப்பட்ட புத்தகத்தை…
மேலும்

சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்

Posted by - December 19, 2017
சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும்…
மேலும்

மெழுகுதிரி சின்னத்தில் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி களத்தில்

Posted by - December 19, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலானது ஜெனிவா சம்பந்தப்பட்டதோ காணாமல் போனோர் சம்பந்தப்பட்டதோ அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்டதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டதோ அல்ல என முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். மட்டக்களப்பு பாலமீன்மடுவில்…
மேலும்

பதவியை இராஜிநாமா செய்தார் நிமல் லான்சா

Posted by - December 19, 2017
உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர்  நிமல் லான்சா தனது பதவியிலிருந்து இராஜிநாமா செய்துள்ளார்.கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பிரதி அமைச்சர் நிமல் லான்சா பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

புளொட் அலுவலகத்திலிருந்து ஆயுதங்கள்மீட்பு- ஒருவர் கைது

Posted by - December 19, 2017
யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் உள்ள புளொட் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்கள் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த வீடானது முன்னர் புளொட் அமைப்பின் அலுவலகமாக செயற்பட்டு வந்த நிலையில் பின்னர்…
மேலும்

காரைநகரில் சுயேச்சைக்குழுவொன்று கட்டுப்பணம் செலுத்தியது

Posted by - December 19, 2017
யாழ்ப்பாணம், காரைநகர் பிரதேசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று காலை சுயேச்சைக் குழுவொன்று வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் மைனர் அப்புத்துரை தலமையிலான சுயேச்சை குழுவினரே காரைநகர் பிரதேசபையின் ஆறு வட்டாரங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனுவினை…
மேலும்

வல்லைக் கடலுக்குள் பாய்ந்த வாகனம்

Posted by - December 19, 2017
யாழ்ப்பாணம், வல்லை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த அரச திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனமொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்துள்ளது.குறித்த  விபத்து சம்பவானது இன்று காலை வல்லைவெளி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.அரச திணைக்களத்திற்கு சொந்தமான டபிள்கப் ரக வாகனமொன்றே இவ்வாறு வல்லை பாலத்திற்கு…
மேலும்

வவுனியாவில் வீடொன்று எரிந்து நாசம்

Posted by - December 19, 2017
வவுனியா, கணேசபுரம் 40 வீட்டுத்திட்டப் பகுதியில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கணேசபுரம், 40 வீட்டுத்திட்டப் பகுதியில் வசிக்கும் இராமமூர்த்தி ஜெகநாதன்…
மேலும்