செப்டம்பர் மாதம் இடம்பெற உள்ள ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவிற்கு இதுவரை தனக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் நவாசை ரத்த புற்றுநோய் தாக்கி உள்ளது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் இங்கிலாந்து சென்றுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை கடுமையாக தாக்கிய ஹார்வே புயலுக்கு இதுவரை இந்திய மாணவர் உட்பட 30 பேர் பலியாகி உள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊழல் அமைச்சர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது எனவும் தவறான ஒருவர் முதல்வராக இருப்பதால் தான் கட்சிக்குள் குழப்பங்கள் இருக்கிறது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவதால் அவர் மீது போலீஸ் நிலையத்தில் மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.