கிராம மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்திலிருந்து தற்காலிகமாக விலகிய கிராம உத்தியோகத்தர்கள இன்று (18) முதல் குறித்த பணிகளை மீண்டும் தொடரவுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தடைப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் போக்குவரத்து செயற்பாடுகளை, இம் மாதம் 20 திகதி முதல் மீள ஆரம்பிப்பது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஊடகப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் உலகநாதன் கடந்த (13-04-2020) திங்கட்கிழமை கொரோனா தொற்று நோய் காரணமாக லண்டனில் உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் படுகொலை வழக்கின் குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவைப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை ; ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைக்கவுள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படும் வரை அவர் சட்ட மற்றும் ; நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.