நிலையவள்

செயற்திறன் அற்ற சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் நீக்கப்படும் – ஜனாதிபதி

Posted by - February 23, 2017
தேர்தல்களை நடத்த தாம் அஞ்சியதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… தேர்தல் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது எனக்குத்…
மேலும்

தலை மன்னார் மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு ரிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் மகிந்த அமரவீர களத்துக்கு விஜயம்

Posted by - February 23, 2017
தலைமன்னார் கடலில் மீனவர்கள் காலா காலமாக பாவித்து வந்த சுருக்கு வலை மீன் பிடித்தொழிலில் ஏற்படுத்தப்பட்ட தடைகளை நிவர்த்தி செய்து தருமாறு அமைச்சர் ரிஷாட்பதியுதீனிடம் அந்தப் பிரதேச மீனவர்கள் விடுத்த வேண்டுகளை அடுத்து அதற்கான முயற்சிகளை அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார். அமைச்சர்…
மேலும்

விமலை விடுதலை செய்யுமாறு கோரி ஹோமாகமயில் போராட்டம்

Posted by - February 23, 2017
தேசிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் சிறையில் வைத்தால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். விமல் வீரவங்சவை விடுதலை செய்யுமாறு கோரி நேற்று ஹேமாகாம நகரில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில்…
மேலும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புதிய தோற்றத்தில் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் – ஜனாதிபதி

Posted by - February 23, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புதிய தோற்றத்தில் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் வெற்றி…
மேலும்

வெள்ளவத்தை – தெஹிவளைக்கு இடையிலான புகையிரத பாதை இன்று முதல் தற்காலிகமாக மூடல்

Posted by - February 23, 2017
புதிய பாலம் ஒன்றை நிர்மாணிக்கவுள்ளதால் கரையோர புகையிரத பாதையில் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளைக்கு இடையிலான பகுதி இன்று இரவு 10.00 மணி முதல் இந்த மாதம் 27 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது. இதன்படி மாத்தறை காலி மற்றும் அளுத்கமயில் இருந்து வரும்…
மேலும்

கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இன்று வைத்தியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - February 23, 2017
மாலம்பே தனியார் மருத்துவப் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டுமொரு தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் இன்றைய தினம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…
மேலும்

இலஞ்சம் பெற்ற சுகாதார பணியாளர் கைது

Posted by - February 23, 2017
ஐந்தாயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்று கொண்ட குற்றச்சாட்டுக்கு அமைய நுகெகொட சுகாதார மருத்துவ அதிகார சபையில் கடமையாற்றிய சுகாதார பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இலஞ்ச ஆணைக்குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடஹாமுல்ல பிரதேசத்தில் கட்டிட நிர்மாணம்…
மேலும்

தம்­புள்ளை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் புதி­தாக ஒரு பள்­ளி­வா­சலைக் கேட்­க­வில்லை – ஹலீம்

Posted by - February 23, 2017
தம்­புள்ளை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் புதி­தாக ஒரு பள்­ளி­வா­சலைக் கேட்­க­வில்லை. இருக்கும் பள்­ளி­வா­ச­லுக்கு பதி­லா­கவே ஒன்றைக் கேட்­கி­றார்கள். அதுவும் காணி­யையே கேட்­டுள்­ளார்கள். கட்டித் தரும்­படி கேட்­க­வில்லை. இதை சிங்­கள மக்கள் நன்கு புரிந்­து­கொள்ள வேண்டும் என தபால், தபால் சேவைகள் முஸ்லிம் விவ­கார…
மேலும்

தேசிய சுதந்திர முன்னணி சபாநாயகரிடம் மேற்கொண்ட கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் தீவிரநிலை

Posted by - February 23, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தேசிய சுதந்திர முன்னணி சபாநாயகரிடம் மேற்கொண்ட கோரிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் தீவிர நிலை ஏற்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தமது முன்னணி…
மேலும்

நிதி அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

Posted by - February 23, 2017
நிதி அமைச்சின் செயலாளர் எச்.எஸ்.சமரதுங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்றைய தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, இரண்டு தினங்களாக…
மேலும்