கடன் நெருக்கடியால் நாட்டை விட்டுச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தனது நிலையானது இரு அணிகள் சுற்றி சுற்றி உதைக்கும் கால்பந்து போன்று ஆகிவிட்டதாக கூறியிருக்கிறார்.
மதுரை மற்றும் சென்னை திருவான்மியூரில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருவதை உறுதி செய்துள்ளது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
அண்ணா நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து கோவளம் கடற்கரை பகுதிகள் வரை சுமார் 32 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் படலம் பரந்து விரிந்துள்ளது. எண்ணெய் கசிவால் மீனவ மக்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.