இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மிக மோசமான யுத்த குற்றவாளி என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டத்தின் தலைமைச் செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
எதிர் வரும் உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்களில் 25% பெண் வேட்பாளர்கள் உள்ளடக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுமென்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொதுச் சட்ட விதிகள் குறித்த அறிவை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில், பாடசாலைகளில் சட்டக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு எண்ணியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை இன்று (11) இரவு அல்லது நாளை காலையாகும் போது வௌியிட முடியும் என்று அரச அச்சகர் கங்கானி கல்பனி கூறியுள்ளார்.
மாவனல்லை அரச வங்கி ஒன்றின் வங்கி பாதுகாவலருடைய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பாதுகாவலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்தனர்.