அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு அமோக ஆதரவு இருப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.ஹிலாரி கிளிண்டன் 48 சதவீதமும், டொனால்டு டிரம்ப் 33 சதவீதமும் பெற்றுள்ளனர். இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் 3 சதவீத வாக்குகளே கூடுதலாக…
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான 31-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாளான இன்று ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி மற்றும் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பணிக்கு திரும்புமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் புறக்கணித்துள்ளனர் .
குமாரபும் படுகொலை வழக்கில் 6 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீடு செய்யுமாறு, ஜனாதிபதி மீண்டும் கோரப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சீ. தண்டாயுதபாணி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
சமஷ்டிக்கான கோரிக்கையை திறந்த மனத்துடன் நோக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.
இராணுவத் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறிய 103 முன்னாள் போராளிகள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் பொருட்படுத்தாது என ஸ்ரீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.