முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் தேடிபார்க்க வேண்டும் என்று ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறியிருக்கிறார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஆர்.பி. நெலும்தெனிய பிறப்பித்த உத்தரவுக்கு அமைய இன்றைய தினம் அவரை கைதுசெய்ய விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசியலில் நேர்மை, எளிமையை அடையாளமாகக் கொண்டு வாழும் இடதுசாரிகளின் மூத்த தலைவர் நல்லகண்ணு என்று துணை முதல்வர் ஓபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்துகொண்டே வழக்கில் ஆஜராகத் தயங்குகிறார் ஸ்டாலின் என கராத்தே தியாகராஜன் விமர்சித்தார். இந்நிலையில் வழக்குகளைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்தது கராத்தே தியாகராஜன்தான் என திமுக பதில் அளித்துள்ளது.
தமிழக அரசு தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான பணிகளை நடத்தக் கூடாது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
குளியலறையில் வழுக்கி விழுந்து பழைய நினைவுகள் அனைத்தும் இழந்துவிட்டேன். சிகிச்சைக்கு பிறகே படிப்படியாக எனது நினைவுகளை மீட்டெடுத்தேன் என்று பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ கூறி உள்ளார்.