மிரிஹான ஜூபிலி போஸ்டில் உள்ள பால்மா விற்பனை நிலையத்தை பொலிஸார் சோதனை செய்து சீல் வைத்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் ஆதாரமற்றவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்கும், பொருட்களை விநியோகிக்கும் முறைகள் குறித்து ஆராய்வதற்காகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களை கண்காணிக்கும் பணியில் இணைந்துகொண்டார்.