வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம்:ஆறு நாட்களில் தீர்மானிக்கப்படும் அறிகுறி

8228 0

மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்தச்சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம் குறித்து தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் ஆணைக்குழு கூட்டத்தின் போதே இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த திருத்தச்சட்டம், அமைச்சர் பைசர் முஸ்தபாவினால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடயம் கையளிக்கப்பட்டது.

இதன்போது மகிந்த தேசப்பிரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பைசர் முஸ்தபா, அடுத்த வாரமளவில் குறித்த சட்டத்தை வர்த்தமானியில் அறிவிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Leave a comment