ஒட்டுசுட்டானில் கவனயீர்ப்பு போராட்டம்

4675 0
வட மாகாண சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை கலைந்து ஒற்றுமையாக செயற்படுங்கள் என வலியுறுத்தி ஒட்டுசுட்டான் பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே உள்ள முரண்பாட்டை கலைந்து. அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, தமிழ் இனம் தலைகுனியாது வாழ்வதற்கு,  கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒற்றுமையான அரசியல் பயணத்தை முன்னெடுக்க வலியுறுத்தி, ஒட்டுசுட்டான் பிரதேச மக்கள் எதிர் வரும் புதன்கிழமை (21.06.2017) மாலை 3 மணிக்கு ஒட்டுசுட்டானில் பேரணியை மேற்கொள்ள உள்ளனர். இதில் அனைவரும் கலந்து கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்.
இப் பேரணி ஒட்டுசுட்டான் நீர்பாசன சந்தியில் இருந்து ஆரம்பமாககும் பேரணி ஒட்டுசுட்டான் சிவன் கோயில் சந்தியில் நிறைவடையும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் ஒட்டுசுட்டான் மக்களால் மகஜர்கள் அனுப்பி வைக்கப்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a comment