நாட்டில் ராணுவ சட்டத்தை அறிவித்த குற்றம்: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு ஆயுள்

11 0

நா​டாளு​மன்​றத்​தில் எந்த விவாத​மும் நடத்​தாமல், ராணுவ சட்​டத்தை தன்​னிச்​சை​யாக அமல்​படுத்த முயன்ற வழக்கில் தென் கொரிய முன்​னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

தென் கொரி​யா​வின் அதிப​ராக இருந்​தவர் யூன் சுக் இயோல் (65). இவர் கடந்த 2024-ம் டிசம்​பர் மாதம் 3-ம் தேதி நாட்டு மக்​களிடம் தொலைக்​காட்​சி​யில் உரை​யாற்​றி​னார். அப்​போது தென் கொரியா​வில் ராணுவ சட்​டத்தை அமல்​படுத்​து​வ​தாக திடீரென அறி​வித்​தார். நாட்​டுக்கு எதி​ராக நாடாளு​மன்​றத்​தில் செயல்​படும் சில சக்​தி​களை வேரோடு எடுத்​தெறிய வேண்​டும். அதற்​காக கடுமை​யான நடவடிக்கை அவசி​யம் என்று கூறி​னார். இது நாட்டில் பெரும் சர்ச்​சையை எழுப்​பியது. பொது​மக்​கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்​தனர்.

இதையடுத்து தென் கொரிய நாடாளு​மன்​றத்​தில் யூன் சுக் இயோலை பதவி நீக்​கம் செய்​யும் தீர்​மானம் கொண்டு வரப்​பட்டு நிறைவேற்​றப்​பட்​டது. அதன்​ பின்​னர் அவர் கைது செய்​யப்​பட்​டார். அவர் மீதும் அவரது மனைவி மீதும் ஊழல் உட்பட பல வழக்கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இந்​நிலை​யில், நாட்​டில் ராணுவ சட்​டத்தை அமல்​படுத்த தன்​னிச்​சை​யாக முடி​வெடுத்த குற்றத்துக்​காக அவருக்கு ஆயுள் தண்​டனை விதித்து சியோலில் உள்ள மத்​திய மாவட்ட நீதி​மன்ற நீதிபதி ஜி குய் இயான் நேற்று தீர்ப்​பளித்​தார்.

நீதிபதி தனது தீர்ப்​பில் கூறும்​போது, ”தனது அரசி​யல் எதிரி​களை ஒடுக்க, நாடாளு​மன்​றத்​துக்குள் ராணுவ வீரர்களை யூன் சுக் இயோல் அனுப்பி வைத்​துள்​ளார். சில காலங்​களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கி வைக்​கும் அவரது உள்​நோக்​கம் இதன்​மூலம் தெளி​வாகத் தெரி​கிறது. நாட்​டில் ராணுவ சட்​டத்தை அறி​வித்​த​தால் சமூக பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. அதை எந்த வகையிலும் நியாயப்​படுத்த முடி​யாது. எனவே முன்​னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டார்.

மேலும், யூன் சுக் இயோல் ராணுவ சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்கு உதவி​யாக இருந்த முன்​னாள் ராணுவ அமைச்​சர் கிம் யாங் ஹியூனுக்கு 30 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. முன்னதாக யூன் சுக் இயோலுக்கு மரண தண்​டனை வழங்​கும்​படி அரசு தரப்​பில் வாதிடப்​பட்​டது. எனினும், அந்த கோரிக்கையை நீதி​மன்​றம் ஏற்​க​வில்​லை.