அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் கிளிநொச்சியில்………….(காணொளி)

352 0

கிளிநொச்யில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழரின் பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.