அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

463 0

தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரைவெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில்குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்துஉயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது  ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை பகல் 9-30மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ்தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது

வட மாகாணசபை உறுப்பினர்களான     சு.பசுபதிப்பிள்ளைப.அரியரத்தினம்  மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர்கலந்துகொண்டிருந்தனர். தமிழ் மக்கள் தமது விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை ரீதியான போராட்டம் மூலம்தமிழர்களின் போராட்டத்தினை உலகம் திரும்பிப்பார்க்க வைத்தவராகஅன்னை பூபதி விளங்கிவருகின்றார்.

கடந்த காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் காரணமாக அன்னை பூபதியின்நினைவுதினம் அனுஸ்டிக்கப்படாத நிலையில் இம்முறை அவற்றினைபல்வேறு தரப்பினரும் நினைவு கூருகின்றமை குறிப்பிடத்தக்கதுகுறிப்பிடத்தக்கது.