யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம்(காணொளி)

260 0

யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால் குறித்த பால் குளிரூட்டும் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி கனகம்புளியடிச் சந்தியில் குறித்த பால் குளிரூட்டும் நிலையம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பால் பதநிடும் நிலையத்தில் பொது மக்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் பாலினை பழுதடையாது குளிரூட்டுவதற்கான இயற்திர வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

பால் குளிரூட்டும் நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் மில்கோ நிறுவனத்தின் வடக்கு, கிழக்கு முகாமையாளர், வடக்கு மாகாண கால்நடை மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.