வடக்கில் மட்டுமல்ல எல்லா மாவட்டத்திலும் சுகாதார ஊழியர் பற்றாக்குறைஉள்ளது -சுகாதார அமைச்சர்

216 0

வடமாகாண சுகாதார அதிகாரிகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சருக்கும் இடையில்  ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது வடமாகாணத்தில் சுகாதார ஊழியர் மற்றும் தாதியர் பற்றாக்குறை காணப்படுகின்றமை அமைச்சரிடம் சுட்டிகாட்டப்பட்டது இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் வடக்கில் மாத்திரம் வெற்றிடங்கள் இல்லை எல்லா மாகாணத்திலும் சுகாதார துறையில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக தாதியர்கள் வெற்றிடம் உள்ளமை பாரிய பிரச்சனை என்பதை நான் அறிவேன் எதிர்வரும் மாதங்களில் தாதியர் பயிற்சி கல்லூரிகளில் இருந்து 3 பிரிவினர் வெளியேறவுள்ளனர்.அதில் வடக்கிற்கு கூடியளவு தாதியரை அனுப்ப ஆவணை செய்கிறேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்..