யேர்மனியின் தலைநகரில் தலைமுறை தாண்டி பேரன், பேத்தி கண்ட தமிழாலயம்!
புலம்பெயர் தேசத்தில் இன்னும் பற்பல தலைமுறைகள் தமிழ் வாழ சான்று பகிர்கின்றது யேர்மன் தமிழ்க் கல்விக் கழத்தின், பேர்லின் தமிழாலயம்!
செந்தமிழ் அழகும் இயற்கையின் வனப்பும்
ஒன்றாய் மிளிரும் தமிழாலயம் – நம்
சிந்தையை ஆளும் தலைவரின் மனதின்
அறிவினில் எழுந்த தமிழாலயம்
பேர்லின் நகரில்
இனத்தின் வேரைப்
பதித்துச் செழித்த தமிழாலயம் – இந்தப்
பாரே போற்றும்
சிறப்பில் உயர்ந்தே
பன்முகம் காட்டும் தமிழாலயம்
பேர்லின் தமிழாலயத்தின்
முத்து விழா காண அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.