பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று (13) கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி அவரை கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இன்றுவரை (13) விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

