புகையிரதத்துடன் மோதுண்டு யானையும் அதன் குட்டியும் உயிரிழப்பு!

211 0

முல்லைத்தீவு பனிக்கங்குளம் பகுதியில்  புகையிரத்துடன் மோதி தாய் யானையும் அதன் குட்டியானையும் உயிரிழந்துள்ளது.

 

நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவு தபால் கடுகதி புகையிரத்துடன் 301வது புகையிரத மைல் கல் பகுதியின் பனிக்கங்குளம் பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

குறித்த சம்பவம் நடந்த பகுதியில் யானைகள் கடக்கும் குறியீடு இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மருத்துவ பரிசோதனையும் முன்னெடுக்கப்படவுள்ளது.