கர்தினாலுக்கு கோவிட் தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

99 0

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவிட் தொற்றினை அடுத்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன் காரணமாக அவரது நாளாந்த நிகழ்ச்சிகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று பேராயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மிக விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து அலுவலகம் திரும்புவார் என்றும் அவரது அலுவலக அதிகாரிகள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.