மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை, நெடியமடு, கற்பானைக்குளம் போன்ற கிராமங்களுக்குள் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சில காட்டுயானைகள் ஊடுருவி அங்குள்ள விவசாயிகளின் தென்னை மரங்களையும், பயிர்களையும் அழித்து துவசம் செய்துள்ளது .
யானை பாதுகாப்பு மின்சார வேலிகள் இருந்தும், அவ் வேலிகளைத் தாண்டி மாலை 7 மணிக்கே கிராமங்களுக்குள் ஊடுருவி தமது பயிர்களையும் வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தி வருவதாகவும், கடந்த 12ம் திகதி நெடியமடு கிராமத்துக்கு மத்தியில் வீதியால் சென்ற நபர் ஒருவரும் இந்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானதாகவும் இப் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர் .
இதனை கவனத்தில் எடுத்து யானைகளை இங்கிருந்து வெளியேற்றி பெரும் காடுகளுக்குள் துரத்தி, தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும் இம் மக்கள் அரசாங்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

