ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் : தமிழர்களுக்கு தெரியவில்லை, தடுத்தே தீருவோம் : பீட்டா ஜோஜிபூரா

395 0

Peta-Leader_Livedayபீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் கூறியதாவது,

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து நாங்கள், எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
சட்ட ரீதியாக உள்ள அனைத்து வழிகளும் ஆலோசனை செய்யப்படுகிறது.
விலங்குகளை காப்பாற்ற வேண்டியது எங்களது கடமை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா பலிகடா ஆக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்ட விரோதம். இதுபற்றி தமிழர்களுக்கு தெரியவில்லை எனக்கூறினார்.