அதிக அவதானம் மிக்க பகுதியாக பேருவளை

245 0
கொரோனா தொற்றுக்குள்ளான பலர் பேருவளை பகுதியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, பேருவளை பிரதேசத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் அதிக அவதானம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பேருவளை பகுதியில், சுமார் 219 பேர் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, அப்பதிக்கான பிரதான வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 12 பேர் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இப்பகுதியை அதிக அவதானம் மிக்க பகுதியாக அடையாளப்படுத்தியுள்ளனர்.