இரட்டை கொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

343 0

court-judgement01ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏறாவூர் பிரசேத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதனிடையே, இந்த இரட்டை கொலை தொடர்பான சான்றுப் பொருட்கள் விஞ்ஞான ரீதியான உறுதிப்படுத்தலுக்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு  அனுப்பி வைப்பதற்காக கடந்த 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இவ்வாறு 17 சான்றுப் பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பித்தக்கது.