முல்லைத்தீவில் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி, நினைவேந்தல் நிகழ்விற்கு தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்(காணொளி)

76759 0

முல்லைத்தீவில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு, இன்றையநாள் துக்கதினமாக அனுஸ்டிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு, முல்லைத்தீவில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு, மக்கள் இன்றைய நாளை துக்கதினமாக அனுஸ்டித்து வருகின்றனர்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத்தம் முடிவுக்கு வந்த நாளில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இதனையடுத்து இன்றைய தினம் நண்பகல் 12 மணிவரை வர்த்தகர்கள் கடைகளை அடைத்து துக்கதினமாக அனுஸ்ரிக்குமாறு கோரப்பட்டதற்கமைவாக, இன்று முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வர்த்தக நிலையங்களை பூட்டி இன்றைய நாளை துக்கதினமாக அனுஸ்ரித்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, தண்ணீரூற்று, ஒட்டுசுட்டான,; மாங்குளம், மல்லாவி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி, நினைவேந்தல் நிகழ்விற்கு தமது பூரண ஆதரவை வழங்கி, இன்றைய நாளை துக்கதினமாக அனுஸ்ரித்து வருகின்றனர்.

Leave a comment