வடக்கில் விகாரைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

281 0

kjhவட மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரைகள் உடைப்பு சம்பந்தமாக ஜனாதிபதி விரைவாக  சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து ஹெல பொது வசிய என்ற அமைப்பு இந்த கடிதத்தை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனவே விகாரைகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இவர்களது கடிதத்தில் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல பொது வசிய அமைப்பின் தலைவரான ஜினவங்ச தேரரின் கையெழுத்துடன் குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஏ9 வீதியில்இ கிளிநொச்சி கனகராயன்குளம் காளியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை நேற்று முன்தினம் சில விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு பல தரப்பினரும் தமது எதிர்ப்பினையும்,கண்டணத்தையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.