இலங்கை கணவன், மனைவி இந்தியாவில் கைது

349 0

625.500.560.350.160.300.053.800.900.160.90இந்திய கடவுச்சீட்டினை பெறும் நோக்கில் போலியான ஆவணங்களை சமர்பித்த இலங்கையை சேர்ந்த கணவனும் மனைவியும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மதுரையில் இருந்து இலங்கை செல்ல இருந்த வேளை, இந்திய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இவர்களின் அடையாளம் குறித்து மேற்கொண்ட விசாரணையின் போது போலி ஆவணங்கள் குறித்த விபரங்கள் தெரியவந்தன

புத்தளம் மாவட்டத்தை சேர்த இவர்கள், தற்போது திருப்பூர், உடுமலை பேட்டையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.