கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் விரைவில் திறக்கப்படும்

446 0

kili-eco_CIகிளிநொச்சியில் அமைக்கப்பட்டு நீண்டகாலமாக திறக்கப்படாதிருக்கும் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் விரைவில் திறக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் அழைப்பையேற்று கிளிநொச்சிக்குப் பயணம் செய்த ஆளுநர் அம்பாள் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தைப் பார்வையிட்டபின் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த பொருளாதார மத்திய நிலையம் விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், குறித்த பொருளாதார மத்திய நிலையமானது அமைக்கப்பட்டு நீண்டகாலமாக திறக்கப்படாது உள்ளது. இந்த நிலமைகளை தான் நேரில் அவதானித்துள்ளதாகவும் இது தொடர்பாக உரிய அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசென்று விரைவில் திறப்பதற்கு ஒழுங்கு செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.