ஒன்றிணைந்த எதிரணி அரசாங்கத்துக்கு சவால்

200 0

தமது மே தினக் கூட்டத்துக்கு வரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, அச்சமடையாவிட்டால், தேர்தலுக்கு செல்லுமாறு ஒன்றிணைந்த எதிரணி அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளது.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

மே தினத்தன்று காலி முகத்திடலை நிரப்ப முடியுமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

காலி முகத்திடலில், மணல் தெரியாதவாறும், கடல் தெரியாதவாறும் மக்கள் கூட்டம் எவ்வாறு திரளப் போகிறது என்பதை பார்த்துக்கொள்ளுமாறு ரோஹித அபேகுணவர்தன கூறியுள்ளார்.