காவல்துறைக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

196 0

காவல்துறை சேவைக்கு புதியவர்ளை உள்வாங்குவதற்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

காவல்துறை காவலர், பெண் காவலர், சாரதி, உள்ளிட்ட பதவிகளுக்கு ஆயிரத்து 500 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை காவல்துறை தலைமையகம் விடுத்துள்ளது.

இந்த ஆட்சேர்ப்பில் தமிழ் பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாகவும், அவர்கள் வடக்கு, கிழக்கிலுள்ள காவல் நிலையங்களில் சேவையில் அமர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்றும் காவல்துறை தலையகம் அறிவித்துள்ளது.