12 கோடி ரூபா பெறுமதியான 14 நாடுகளின் பணம் கட்டுநாயக்க சுங்கம் வசம்

212 0

வெளிநாட்டு பணத் தொகையுடன் இந்திய நபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

12 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை இவர்களிடமிருந்து சுங்கப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

14 நாடுகளின் நாணயங்கள் இவர்களிடம் காணப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இந்த தொகையை சிங்கப்புருக்கு எடுத்துச் செல்ல தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் சுங்கப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.