மே தினத்துக்காக 7 ஆயிரம் தனியார் பஸ்கள் தயார்- கெமுனு விஜேரத்ன

195 0

மே தின ஊர்வலங்களுக்காக செல்லும் அரசியல் கட்சிகளுக்கு 7 ஆயிரம் தனியார் பஸ்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியே அதிகமான பஸ்களைக் கோரியுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதுதவிர அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களினால் சுமார் 5 ஆயிரம் பஸ்களுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே தினத்தில் சுமார் 16 கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் இதில் 15 கூட்டங்கள் கொழும்பில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.