நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படமாட்டாது- ஜனாதிபதி

235 0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இந்திய பிரதமர் வெசக் தின நிகழ்வைத் தவிர்ந்த எந்தவொரு உத்தியோகபூர்வ நிகழ்விலும் பங்குகொள்ளமாட்டார் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள விசாக பூரணை நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகின்றார்.

நாட்டின் சில பகுதிகளை சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு அவர் இலங்கை வருவதாக சில இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த அனைத்து பிரசாரங்களும் அரசாங்கத்திற்கு எதிரான சிலரினால் முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களாகும் எனக் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.