12 கோடி பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது

215 0

12 கோடி பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் 2 இந்திய நாட்டு பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 14 நாடுகளின் நாணயங்கள் மீட்கப்பட்டதாக சுங்க பிரிவு ஊடக பேச்சாளர் தர்மசேன கஹதவ தெரிவித்துள்ளார்.

இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்த 2 பேரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.