வடகொரியா மற்றுமொரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை பரிசோதனையானது வடகொரிய நேரப்படி சனிக்கிழமை நிகழ்த்தப்பட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், அந்த ஏவுகணை வடகொரிய பிராந்தியத்தை விட்டு வெளியேறவில்லை என அமெரிக்க தரப்பு கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.