மறைந்த ஊடகவியலாளர் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று கிளிநொச்சியில்

259 0

மறைந்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கான விருது ஒன்றும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சிவராம், 2005 ஆண்டு ஏப்ரல் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.