மைத்திரி – சம்பந்தன் ஹக்கீம் – இடையில் சந்திப்பு

204 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்; இரா. சம்பந்தன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லிமலையில் பௌத்தர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உரிய முறையில் ஆராய்ந்து அதற்கான பரிகாரம் காணும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால இதன்போது தெரிவித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.