புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்ட பேரணிகள்

218 0

அம்பாறை- இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி மலைப் பகுதியில் சட்டவிரோதமாக புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதைக் கண்டித்தும் அங்கு விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று (28) வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்றன.

கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, இறக்காமம் உள்ளிட்ட பல முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணிகளில் அரசியல் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

பபதாதைகளை ஏந்தியவாறு ஜூம்ஆப் பள்ளிவாசல்கள்களின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மக்கள், அந்தந்த பிரதேச செயலகங்கள் வரை சென்று பிரதேச செயலாளர்களிடம் மகஜர்களை கையளித்தனர்.